Posts

வஞ்சிக்கப்படும் பிற்படுத்தப்பட்ட மக்கள் OBC(BC+MBC)

Image
இட ஒதுக்கீடு என்றால் என்ன அது எதற்கு வழங்க படுகிறது யாருக்கெல்லாம் இட ஒதுக்கீடு என்கிற புரிதல்  பலருக்கு இல்லை.இட ஒதுக்கீடு என்றால் பட்டியிலன மக்கள் மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டும் தான் என ஒரு பொது புத்தி  உள்ளது.நமக்கு  பள்ளி மற்றும் கல்லூரியில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாதது பெரும் பின்னடைவு.   மேடை தோறும் முழக்கமிடும் அரசியல்வாதிகள் பட்டியிலன மக்களுக்கு  தாங்கள் தான் எல்லாம் செய்தோம் என போட்டி போட்டுக்கொண்டு பொய்களை பரப்பவே நேரம் சரியாக இருக்கும்.  பண்டிதர் அயோத்தியதாசர், தாத்தா இரட்டைமலை சினுவாசம் பிள்ளை பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற எண்ணற்ற தலைவர்கள் தங்கள் உழைப்பால் வாங்கிக்கொடுத்த உரிமைகள் எல்லாம் இவர்களும் இவர்கள் தலைவர்களும் இயக்கங்கள் நடத்தியும் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தும் வாங்கி கொடுத்தது போல பேசுவார்கள் . இவர்களின் தலைவர்களும் இவர்களும் முதலமைச்சர் ஆவதும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் ஆவதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் என மறந்துவிடுகிறார்கள் திட்டமிட்டு மறைத்தும் விடுகிறார்கள்.சொத்தும் நிலமும் இருந்தால் தான் ஓட்டுரிம...

தலைவர் ஜான் ரத்தினம்-தமிழர் வரலாறு

Image
தலைவர்ஜான்ரத்தினம் (1846-1942) கலைக்கல்வி, தொழிற்கல்வி ஆகிய இரண்டுமே மக்களை முன்னேற்ற உதவும் கருதி  1886இல் ஒருமாதிரி பள்ளியை நிறுவுகிறார்,.  1892இல் ஆண்  பெண் இருவரும்படிக்க ஆயிரம்விளக்கு பகுதியில் பெரியகல்விநிலையத்தை அமைத்து அதற்கு அவரே தலைமை ஆசிரியராக    பணியாற்றுகிறார் ,மக்கியமா நகர், தேனாம்பேட்டை பகுதிகளில் பள்ளியை தொடங்குகிறார்  1889 இல் மாணவர் விடுதி ,சித்திரம் ,தச்சு, தையல் போன்றவைகளை கற்கும் தொழிற்கல்வி கூடங்களை அமைக்கிறார் , தொழிலின் பேரால் நடைபெறும் ஏற்ற தாழ்வுகளை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துகிறார்  1885இல் திராவிடபாண்டியன் என்கிற தமிழ் வெளியீட்டை வெற்றிகரமாக நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்  1892இல் திராவிடர்கழகம் என்ற அமைப்பை தொடங்கி மக்களிடம் சமுதாய பணி செய்கிறார் அறிவுசார்ந்த கருத்துக்களை வெளியிடுகிறார்,1897இல் சில காலம் கவுரவ நீதிபதியாக இருந்துள்ளார்  குறிப்பு: பெரியாரிஸ்ட் ,திராவிடம் பேசுர ஒருத்தன் கூட இவரை பத்தி பேசி நான் கேள்விப்பட்டதில்லை...பேசிட்டா சாயம் வெளித்திடும் உங்...

மகாபாரதமும் இஸ்லாமியர்களும்

Image
 சனாதனவாதிகள் மகாபாரதம் மிகவும் பழமையான ஒன்று என தொடர்ந்து கூறுவார் அதன் காலத்தை வறையை செய்வது கடினமே என்பார்கள் காலத்தை கணிக்கவே முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர் ஆனால் இந்த கட்டுரை மூலம் அதன் காலத்தை அறியலாம் மேலும் மகாபாரதம் தொடர்பான பல புதிய தகவல்களை  பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்களின்  ஆய்வுகளின் வழியாக விளக்க முயற்சி செய்துள்ளேன். மகாபாரதம் இந்தியாவில் இஸ்லாமியர்கள் படையெடுப்பிற்கு பிறகே முழு வடிவம் பெற்றிருக்கும் இதற்கு பல சான்றுகள் உள்ளன முதலில் மகாபாரதம் நூல் எப்படி உருவானது என நாம் பார்க்கவேண்டும்.  மகாபாரதம் மூன்று பதிப்புகளாக  உருவாகியுள்ளது இதில் முதல் பதிப்பு "ஜெயா" என அழைக்கப்பட்டுள்ளது இது வியாசரால்  எழுதப்பட்டது . இரண்டாவது பதிப்பு வைஷாம்பெயன   இவர் வியாசரின் மாணவர் இவர் மட்டுமல்லாமல்  சுமன்டு ,ஜெய்மினி, பைலா, ஷுக்கா என நான்கு மாணவர்கள் வியாசருக்கு இருந்தனர்  இவர்கள் நால்வரும் ஒவ்வொரு பதிப்பை எழுதினார்கள்  இவை அனைத்தும் வைஷாம்பெயன தொகுத்து தன்னுடைய  பாரத பதிப்பை வெளியிடுகிறார் இவர்களுக்கு பிறகு இறுதியாக...

சாத்தன் சாம்பவர் (பரையர்)-தமிழர் வரலாறு

Image
#சாத்தன்சாம்பவர் (பரையர்) தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை ஆண்ட குறுநில மன்னர் தான் இந்த சாத்தன் சாம்பவர் இவரின் முன்னோர்கள் #முற்காலபாண்டியவம்சத்தைசேர்ந்தவர்கள் , இந்த சாத்தன் சாம்பவர் பெயரில் தான் சாத்தான் குளம் பெயர் உருவாகியது இவருக்கு  #அமராவதிநாச்சியார் என்கிற  தங்கையும் அரும்பொன் சாம்பான் ,உடையமுத்து சாம்பான் என்கிற சகோதரர்கள் இருந்துள்ளார்கள் அமராவதி நாச்சியார் பெயரில் இன்றும் குளம் உள்ளது ... அந்த சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு குளங்கள் நீர் நிலைகள் சாத்தன் சாம்பவரால் அமைக்கப்பட்டுள்ளது , #கருமேனியறு இவரால் வெட்டப்பட்டுள்ளது ,ராதாபுரம் வள்ளியூர் முதல் மனப்பாடு வரை உள்ள கால்வாய் இவரால் வெட்டப்பட்டுள்ளது மேலும் திருச்செந்தூர் மாநாடு கைலாசநாதர் கோவில் இவரால் கட்டப்பட்டது ,திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு 500 ஆண்டுகள் முந்தைய திருச்செந்தூர் பழைய சிவன் கோயில் சாத்தன் சாம்பவரின் முன்னோர்கள் கட்டியது ,  தன்னுடைய கணக்குகளை பார்க்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 7 வீட்டு கணக்குப்பிள்ளைகளை வேலைக்கு அமர்த்துக்கிறார் அவர்களின்...